கோயில் ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல

பழங்காலத்தில் கோயில்கள், இறை வழிபாட்டுக்காக மட்டுமின்றி, கலாச்சார மையம், கல்விச் சாலை, வைத்தியசாலை என பன்முகத்தன்மையோடு திகழ்ந்தன. அவ்வகையில், லண்டனில் உள்ள கிங்ஸ்பரியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஹிந்துக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தினமும் 1,300 தடுப்பூசிகள் போடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.