காலியாகும் கூடாரம்

முன்னாள் மாநில அமைச்சரும் மம்தா பானர்ஜியின் வலது கரமாக திகழ்ந்தவருமான சுவேந்து ஆதிகாரி பதவி விலகியதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்கள் உட்பட ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், இரண்டு முறை எம்.எல்.ஏவாக பதவி வகித்த டயமண்ட் ஹார்பரைச் சேர்ந்த தீபக் ஹல்தார் கடந்த திங்கட்கிழமை அந்த கட்சியில் இருந்து விலகினார். “என்னை சரியாக தொகுதி வேலை செய்ய அனுமதிக்கவில்லை, அதை தலைமை கண்டுகொள்ளவில்லை ஆனால் மக்களுக்கு பதில் அளிக்கும் இடத்தில் நான் உள்ளேன் என்பதால் ராஜினாமா செய்கிறேன்” என அவர் தன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுவரை திரிணாமுல் காங்கிரசில் இருந்து 17 எம்.எல்.ஏக்களும் ஒரு எம்.பி.யும் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.