நான்கு வேண்டுகோள்கள்

நாடு முழுவதும் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், கொரோனா தடுப்பூசி திருவிழா துவங்கியதையொட்டி, பிரதமர் மோடி, ‘கொரோனா சிகிச்சை பெறவும் தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவுங்கள், முகக் கவசங்கள் அணியுங்கள், மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள், தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள்’ என பொது மக்களுக்கு நான்கு வேண்டுகோள்களை விடுத்துள்ளார். முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் தகுதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார். இதனையொட்டி, மருத்துவமனைகள், தடுப்பூசி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.