ஆற்றை ஆக்கிரமித்த தி.மு.க தலைவர்

கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மோகன், அவரது மருமகன் வசந்த் துணையோடு அங்கு தனது கடையை கட்ட முயற்சித்துளார். மேலும் அங்கு ஓடும் ஆற்றிலும் தனது ஆக்கிரமிப்பிற்கு அஸ்திவாரம் போட்டுள்ளார். இதனை அறிந்த பொதுப்பணித்துறையினர் உடனே அங்கு விரைந்து சென்று மோகனின் ஆற்று ஆக்கிரமிப்புச் செயலைத் தடுத்து நிறுத்தியதுடன் ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். இந்த ஆக்கிரமிப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://kathir.news/politics/–1090330