புதிய சிரூர் மடாதிபதி தேர்வு

கர்நாடகா, உடுப்பி மாவட்டத்தில் ஸ்ரீ மாதவாச்சாரியார் கட்டிய கிருஷ்ணன் கோயிலும் எட்டு மடங்களும் உள்ளன. அவற்றுள் சிரூரில் உள்ள ‘த்வந்த’ மடமும் ஒன்று. இம்மடத்தின் தலைமை ஜீயர் லட்சுமிவர தீர்த்தா, கடந்த 2018ல் சமாதி அடைந்தார். இதையடுத்து அனிருத்தா சரளத்தையா என்ற 10ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவர் புதிய ஜீயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மே 11 முதல் 14 வரை, அனிருத்தா சரளத்தையாவுக்கு சன்னியாச தீட்சை வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். இறுதி நாளன்று மடத்தின் ஜீயராக அவர் பொறுப்பேற்கிறார்.