தங்கச்சங்கிலியை ஒப்படைத்த நல்லவர்

புதுச்சேரி, பாகூர் சேலியமேடு கிராமத்தை சேர்ந்தவர் உள்ளாட்சித்துறை இளநிலைப் பொறியாளரான பாலமுருகன். இவர் நடைபெயிற்சி மேற்கொண்டிருந்தபோது தந்தை பெரியார் நகர் அருகே சாலையின் ஓரம் தங்கச்சங்கிலி கிடப்பதை கண்டெடுத்தார். யாரும் அதனை உரிமைக்கோரி வராததால், ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை காவல்துரையினர் பாராட்டினர்.