இலங்கைக்கு செல்லும் திருவள்ளுவர் சிலைகள்

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலையில், பிப்ரவரி 21ல் நடைபெற உள்ள உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து, இரண்டு திருவள்ளுவர் சிலைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.தமிழ்த் தாய் அறக்கட்டளை சார்பில், மலேஷியா, மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு, இதுவரை, எட்டு திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இந்த அமைப்பு, இலங்கை, யாழ்ப்பாண பல்கலையில், பிப்., 21ல் நடக்க உள்ள, உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டுக்கு, இரண்டு கருங்கல் சிலைகளை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு சிலையும் தலா, 2.75 அடி உயரமுள்ளவை.