அண்ணனை விரட்டியவர் நல்லது செய்வாரா?

திருச்சியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘ஸ்டாலினால், தன்னுடன் பிறந்த அண்ணனையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்கு போட்டியாக வந்து விடுவார் என்று கட்சியை விட்டே நீக்கியவர். அப்படிபட்டவர், நாட்டு மக்களுக்கு மட்டும் எப்படி நன்மை செய்வார்? ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு, தி.மு.கதான். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தி.மு.க. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்ட ஸ்டாலின் தான், அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார். தி.மு.க.,வும் காங்கிரஸும் தான் ‘நீட்’ தேர்வை கொண்டு வந்தது. இந்நிலையில், எதோ, பாம்புக்கும் கீரிக்கும் சண்டை காட்டும் வித்தைக்காரர் போல நானும் மனு வாங்குகிறேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்’ என பேசினார்.