வேல் செய்யும் வேலை

கந்த சஷ்டி கவசத்தை பழித்த கருப்பர் கூட்டத்தின் ஆதரவாளரான தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும், தேர்தல் வெற்றிக்காகவும் ஹிந்து ஓட்டு வங்கியை குறி வைத்தும் அண்மைக்காலமாக முருகப்பெருமானின் ஆயுதமான வேலை கையில் ஏந்துகின்றனர். சமீபத்தில் எட்டு கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட  வேலை ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், கூட்டணியில் உள்ள திருமாவளவன் ஆகியோர் வேலுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இந்நிலையில், மதுரையில் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க.,வினர் அளித்த முருகப்பெருமானின் வேலை கனிமொழி முகத்தை சுளித்துக்கொண்டு, வாங்க மறுத்து அதனை தள்ளிவிட்டார். ‘வெள்ளி, தங்கத்தில் தராமல் வெண்கலத்தில் தந்தனர் என்பதால் அவர் வாங்கவில்லை போல இருக்கிறது’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.