கோயில் கட்ட மொய் விருந்து

புதுக்கோட்டை, நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலவேலாயுதம். தீவிர சிவபக்தரான இவர் கடந்த, 18 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சமீபத்தில் மொய் விருந்து நடத்தினர். இதில் ரூ. 31 லட்சத்து, 64 ஆயிரத்து, 171 ரூபாய் வந்தது. இந்த பணம் அனைத்தையும் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிவன் கோயில் கட்டுமான பணிக்காக வழங்கினார் பால வேலாயுதம். இவர் ஏற்கனவே இக்கோயிலுக்காக ரூ. 16 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இவரது குடும்பத்தினரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.