காருண்யாவை நிராகரித்த நல்லூர்

தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் உள்ளிட்ட அரசு ஆவணங்களில் காருண்யா நகர் என்ற பெயரை நீக்கி, உண்மை பெயரான நல்லூர்வயல் என மாற்றக் கோரி, பழங்குடி மக்கள் நேற்று கோவை கலெக்டர் ராஜாமணியை சந்தித்து மனு அளித்தனர். மேலும், பொதுத்துறை வங்கி, பி.எஸ்.என்.எல், காவல் நிலையம், மின்சார வாரியத்துக்கும் காருண்யா நகர் என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கிராமத்தின் உண்மையான அடையாளத்தை இழந்துள்ளோம். எனவே பாரம்பரிய பெயரான நல்லூர்வயல் என்ற பெயரை உடனே நிலைநிறுத்த ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.