அசாமில் அனைவருக்கும் தடுப்பூசி

அசாமில், 18 முதல் 45 வயது வரையிலான அனைத்து பயனாளிகளுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது. அம்மாநில அரசின் சுகாதாரம், நிதித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, அசாம் அரசு பாரத் பயோடெக்கிற்கு 1 கோடி டோஸ் கோவாக்சின் வாங்க கொடுத்துள்ள ஆர்டர் கடிதத்தை பகிர்ந்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு அசாம் ஆரோக்கிய நிதியில் சேகரிக்கப்பட்ட நிதி இந்த தடுப்பூசிகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.