முதல்வரின் முதல் கையெழுத்து

தி.மு.க பிரச்சாரக் கூட்டத்தில், ‘முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக விவசாயக் கடன் ரத்து, கூட்டுறவு நகைக் கடன் ரத்து என்ற கோப்பில் போடுவதாக இருக்கும். மேலும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, நூறு நாளில் மக்கள் குறை தீர்க்கும் திட்டம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4000 கருணாநிதி பிறந்த நாள் அன்று அன்று வழங்கப்படும்’ என பல வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் பதவி ஏற்றபின் முதல்வர் ஸ்டாலின் எந்தத் திட்டத்தில் முதல் கையெழுத்தைப் போடுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது அவர் முதல்வராக பதவி ஏற்றவுடன், முதல் அரசாணையாக கரோனா நிவாரணம் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4,000, அதில் முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ. 2,000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். மேலும் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, உள்ளூர் பேருந்தில் பெண்களுக்கு இலவச  பயணம், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெற்ற மனுக்களை நிறைவேற்ற தனித்துறை, இதற்காக ஐ.ஏஎ.ஸ் அதிகாரி நியமனம். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கரோனா சிகிச்சை பெறுவோருக்கான அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும் போன்ற 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.