தி.மு.க எனும் சேறு

அ.தி.மு.கவில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி இரா. முத்தையாவின் மூத்த மகனும் திருமங்கலம் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அப்போது பேசிய அவர், ”எங்கள் குடும்பத்தை வாழ வைத்தது மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்தான். ஆனால், அதை, மறந்துவிட்டு எனது தந்தையும், சகோதரரும் தி.மு.க எனும் சேற்றில் விழுந்து விட்டார்கள். அதிலிருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளனர். திமுகவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்காத காரணத்தினால், தற்போது அ,தி,மு,கவில் என்னை இணைத்துக்கொண்டேன் என கூறினார்.