கேரள தங்கக் கடத்தல் வழக்கு

கேரள தங்கக் கடத்தல், டாலர் கடத்தல் வழக்கில் பரபரப்பான திருப்பமாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், சபாநாயகர், மூன்று அமைச்சர்களுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ்  குற்றம்சாட்டி வாக்குமூலம் அளித்திருந்தார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘முதல்வர் பினராயி விஜயன் மீது பொய்யாக குற்றம் சாட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு அமலாக்கத்துறை அழுத்தம் கொடுத்தது’ என கூறி, அம்மாநில கேரள காவல்துறை அமலாக்கத்துறை மீது சதி, மோசடி என பல்வேறு குற்ரப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. தனது அரசியல் வாழ்வு பாழாகும், கைது செய்யப்படலாம், ஆட்சியமைக்க முடியாமல் போகலாம் என்ற பயத்தில் உள்ள பினராயியின் அழுத்தத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை என இது குறித்து அங்குள்ள மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.