காலிஸ்தான் பயங்கரவாதி கைது

பஞ்சாப் காவல்துறையினருடனான கூட்டு நடவடிக்கையில் லக்னோவைச் சேர்ந்த  காலிஸ்தான் பயங்கரவாதி ஜாகா எனப்படும்  ஜக்தேவ் சிங்கை உத்தர பிரதேச போலீசார் கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்தனர். இவர் பஞ்சாப் காலிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளான பரம்ஜீத் சிங் பம்மா, மால்தானி சிங் போன்றோருடன் தொடர் பில் இருந்துள்ளார் என்று போலீசார் விசாரனையில் தெரிய வந்துள்ளது.