வாள் வீச்சு வீராங்கனை

சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சமீபத்தில் ஹங்கேரியில் நடைபெற்ற உலகக் கோப்பை வாள் வீச்சுப் போட்டியில் பங்கேற்று கால் இறுதியில் தோல்வியடைந்தார். எனினும், சரி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின்படி (ஏ.ஓ.ஆர்) அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பாரத வாள்வீச்சு வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பவானிக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.