தேர்தல் பணியில் முன்னாள் ராணுவத்தினர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு பணியாற்ற விருப்பமுள்ள 65 வயது நிரம்பாத முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள் விருப்ப மனு அளிக்கலாம். அவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும், தேர்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். எனவே, தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்ப மனுவுடன், வாக்காளர் அடையாள அட்டையின் நகலை இணைத்து வழங்க வேண்டும். இதற்காக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 044 – 29540444 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விருப்ப மனு அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.