போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள் என்ற இந்து முன்னணியின் புத்தகத்தில் இருந்து

  1. உலகத்தில் சுமார் 52 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அவற்றுள் ஹஜ் யாத்திரைக்கு மானியம் வழங்கும் ஒருநாட்டைக் காண்பிக்க முடியுமா?
  2. இந்தியாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புரிமைகளை, இந்துக்களுக்கு வழங்கும் ஒரு முஸ்லீம் நாட்டைக் காட்டுங்கள் பார்ப்போம்.
  3. முஸ்லீம் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ இருக்கும் ஒரு முஸ்லீம் நாட்டைக் காண்பிக்க முடியுமா?
  4. 18 சதவீதம் சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள ஏங்கும் 82 சதவீதம் பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு இந்தியாவைத் தவிர வேறொன்று இருக்கிறதா?
  5. அப்பாவிகளைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக (ஃபத்வா) தண்டனை விதித்த ஒரு இமாமைக் காட்ட முடியுமா?
  6. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மகாராஷ்டிரா, பீகார், கேரளா, புதுவை போன்ற மாநிலங்களில் முஸ்லீம்கள் முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீரில், கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள நாகாலாந்து, மிசோரமில் ஒரு ஹிந்து முதல்வராக வர முடியுமா?
  7. இந்துக்கள் தற்போது 85% இருக்கிறார்கள். இந்துக்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக இருந்திருந்தால் மசூதிகளும், மதரஸாக்களும், இப்படிப் பல்கிப் பெருகி இருக்க முடியுமா?
  8. தேசப் பிரிவினையின்போது பாரதத்தின் 30% இடத்தை எதுவும் பேசாமல் இந்துக்கள் முஸ்லிம்களுக்குக் கொடுத்தார்களே அப்படி இருந்தும் தற்போது அயோத்தியா, மதுரா, காசியில் உள்ள தங்கள் புனித இடங்களைப் பெறுவதற்காக இந்துக்கள் ஏன் கெஞ்ச வேண்டும்?
  9. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் வரும் பணத்தைத் தங்களின் விருப்பப்படி தானே செலவு செய்கின்றனர்? பிறகு ஏன், நமது கோயில் பணத்தையும் அவர்களின் நலன்களுக்காகச் செலவழிக்க வேண்டும்?
  10. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பொதுவான பள்ளிச் சீருடை உள்ளதே. நாட்டின் குடிமக்களுக்கு மட்டும் பொதுவான சிவில் சட்டம் இருக்கக்கூடாதா?

 

தொடரும்…