சர்வதேச ஆசிரியர், மாணவர் விருது

‘வர்க்கி பவுண்டேஷன்’ அறக்கட்டளை சார்பில் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும், கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களையும், கல்வித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய மாணவர்களையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர், சர்வதேச மாணவர் விருதுகள் வழங்கப்படுகின்றன.  2021-ம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர், சர்வதேச மாணவர் விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் விருதுக்கு சுமார் ரூ.7.4 கோடி பரிசுத் தொகையும், மாணவர் விருதுக்கு சுமார் ரூ.36.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. 16 வயது பூர்த்தியடைந்த பகுதி நேரம், இணையவழி  மாணவர்கள் உட்பட அனைத்து மானவர்களும் விண்ணப்பிக்கலாம். கற்பித்தல் நடைமுறைகள், உள்ளூர் சவால்களை எதிர்கொள்ளும் விதம், வகுப்பறைக்கு அப்பால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.