சிறிய செயற்கைகோள்

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் நினைவாக அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து 100 செயற்கைகோள்களை தயாரித்துள்ளனர். இதில், வேலூர், பென்னாத்தூரை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களான தேவநாதன்,  கௌதம் ஆகியோர் தயாரித்த 40 கிராம் எடைகொண்ட மிகச்சிறிய செயற்கைகோள் உட்பட 100 செயற்கைக்கோள்களும் வரும் ஏழாம் தேதி ஹீலியம் பலூன் வழியாக 38,000 மீட்டர் உயரம்வரை விண்ணில் செலுத்தப்படும்.