ஸ்ரீதர் வேம்பு நியமனம்

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் செயல்பட்டு வரும் ஆலோசனைக் குழுவில் ஸ்ரீதர் வேம்பு உறுப்பினராகச் செயல்படுவார். தஞ்சாவூர் உமையாள்புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வேம்பு. கிராமப்புறங்களைத் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை வளர்க்க வேண்டும் என்று  சோஹோ மென்பொருள் நிறுவனத்தை பாரதத்தில் தொடங்கினார். தற்போது அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உட்பட எட்டு நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தேசத்தை வலுப்படுத்தும் இவரது முயற்சியை பாராட்டி இவருக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.