கை கொடுக்குமா கவிழ்த்திடுமா

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில் மேற்கு வங்க தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் பல ஊடகங்கள் “எக்ஸிட் போல்” எனப்படும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. தமிழகத்தில், பெருவாரியான ஊடகங்கள் தி.மு.க வெற்றி பெறும் என கருத்து தெரிவித்திருக்கின்றன. இது தி.மு.க உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தியுள்ளது என்றாலும், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் இதே ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், தி.மு.க 114 முதல் 140 வரை தொகுதிகள் பெற்று வெற்றி பெரும் என தெரிவித்திருந்தன. ஆனால் நடந்தது என்னவென்று நமக்கே தெரியும். எனவே இதனை முழுதாக நம்பலாமா வேண்டாமா? என தி.மு.க தலைமையே குழப்பத்தில்தான் உள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் கை கொடுக்குமா கவிழ்த்திடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.