தி.மு.கவினர் நாடகம்

திருப்பூர், சென்னிமலையில் சில நாட்களுக்கு முன் தி.மு.கவின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன், உதயநிதிக்கு, வெண்கலத்தில் செய்யப்பட்ட, ஒரு அடி உயர முருகன் சிலையை பரிசளித்தார். இதை, மிகுந்த தயக்கத்துடன் உதயநிதி பெற்றுக் கொண்டார். முன்னதாக ஸ்டாலின், திருமாவளவன், துரைமுருகன் போன்றோருக்கு வேல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம், தி.மு.கவின் விழாக்களில் இதுபோன்ற பரிசுகள் அளிக்கப்பட்டதில்லை. ‘தி.மு.க ஓர் ஹிந்து விரோத கட்சி’ என்ற எண்ணத்தை மாற்றுவதற்காக தி.மு.கவினர் திட்டமிட்டே இப்படி நாடகமாடுகின்றனர் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.