அம்னெஸ்டி சொத்துக்கள் முடக்கம்

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, பாரதத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. எனவே எப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா’, ‘இந்தியன்ஸ் பார் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ட்ரஸ்ட்’ ஆகியவற்றிற்கு சொந்தமான ரூ.17.66 கோடி வங்கி டெபாசிட் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த அமைப்பின் பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.19.54 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.