சீரம் நிறுவன சி.இ.ஓவிற்கு பாதுகாப்பு

நமது நாட்டிலேயே மிக அதிகளவில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்து வருவது சீரம் நிறுவனம். இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருப்பவர் அதார் பூனாவாலா. இவரை இடைவிடாமல் திட்டித் தீர்ப்பவர் காங்கிரஸ் தலைவர் ராகுல். இந்நிலையில், அதார் பூனவாலாவிற்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலையடுத்து அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாரதத்தில் அவர் எந்த இடத்திற்கும் பயணித்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘ஒய்’ பிரிவில் இரண்டு கமோண்டக்கள் உட்பட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் 24 மணி நரமும் சுழற்ச்சி முறையில் பணியாற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.