அமேதி மக்களை அவமதித்த ராகுல்

கேரளா, வயநாட்டில் காங்கிரஸின் ராகுல், தன் தேர்தல் பிரசார உரையில்,”கேரள மக்கள், பிரச்சனைகளில் விரிவாக பேசி அலசுகிறார்கள், மற்ற மாநில மக்களை போல அவர்கள் மேலோட்டமாக இல்லை. தெற்கில் உள்ளவர்களைப் போல வடக்கில் உள்ளவர்கள் தீவிரமாக இல்லை. நான் அமெரிக்க மாணவர்கள் சிலரிடம் பேசும்பொழுது, கேரளாவுக்குச் செல்வதை நான் மிகவும் ரசிக்கிறேன் என்று சொன்னேன்” எனகூறி பலமுறை தனக்கு வாக்களித்த அமேதி மக்களை அவமதித்துள்ளார். ‘தேர்தலுக்காக வடக்கு தெற்கு பேதத்தை உருவாக்கி, காங்கிரஸ் பன்நெடுங்காலமாக பயன்படுத்தி வரும் பிரித்தாளும் சூழ்ச்சியை மீண்டும் அறங்கேற்றியுள்ளார்’ என அவருக்கு வாக்களித்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.