அணிலாக இணைவோம்

திருநெல்வேலி, வெங்கடஜலாபுரம் கிராமத்தில் ஸ்ரீராமனுக்காகவே வாழ்ந்து, தினமும் ராமாயணம் படித்து வந்த குடும்பத்தினர் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்தனர்.

அம்மம்பாளையம் பஞ்சாயத்து துப்பரவுத் தொழிலாளிகள் தங்கள் பங்களிப்பாக ஸ்ரீராமருக்கான நிதியை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரிடம் வழங்கினர்.

வனவாசி சேவா கேந்திரத்தின் மாநில இணை செயலாளர் சே.ஸ்ரீதர் ஸ்ரீராம ஜென்மபூமிக்கு நிதியளித்தார்.

வடசென்னையில் பெரிய ஜவுளிக்கடையான ‘வீராஸ்’ நிறுவனர் பாலசுப்பிரமணியம் ஸ்ரீராமருக்கு அளித்த காணிக்கை.

நாமக்கல், பெரியூர் கிராமத்தில் கூலி வேலை செய்யும் வேலுசாமி சுந்தரி தம்பதியினர் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1,000 நிதியளித்தனர்.

கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் சுவாமினி சுத்தானந்த சரஸ்வதி அம்மா ஸ்ரீராமருக்கு நிதி சேகரித்துக் கொடுத்தார்.

ராஜஸ்தான், ராஜ்சமந்த் மாவட்டத்தில் ஸ்ரீராமர் கோயிலுக்கு நிதி சேகரிக்க சென்ற சேவர்களை, அங்குள்ள மக்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.