ராமருக்கு அள்ளிக்கொடுத்த மக்கள்

ஸ்ரீராம ஜென்மபூமியில் ராமருக்கான ஆலயத்தை டாடா, எல்&டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் இலவசமாக கட்டித்தர முன்வந்தாலும் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என கருதிய ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, இதற்காக தேசம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது. பலர் இதில் ஆர்வத்துடன் இணைந்து நிதி திரட்டியும், நிதியளித்தும் வருகின்றனர். மக்களின் ஆதரவால் மிகக்குறைந்த நாட்களில், ரூ. 1,511 கோடிக்கும் அதிகமாக நன்கொடை திரட்டப்பட்டுள்ளது என அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.