மகாத்மா ஜோதிராவ் புலே

தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தத்துவ மேதை மற்றும் எழுத்தாளருமான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சமூக நீதியின் முன்னோடியாக திகழ்ந்ததற்காக பெரிதும் போற்றப்படும் மகாத்மா பூலே எண்ணற்ற மக்களின் நம்பிக்கை ஆதாரமாக திகழந்தார். பன்முக ஆளுமை கொண்டவரான அவர், சமூக சமத்துவம், மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் கல்வியை ஊக்குவிக்க அயராது பாடுபட்டவர். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இன்று மகாத்மா புலேவின் பிறந்தநாள், இன்னும் சில தினங்களில், அதாவது 14ம் தேதி அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறோம். கடந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன். மகாத்மா பூலே மற்றும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் தலைசிறந்த பங்களிப்புகளுக்காக பாரதம் அவர்களுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.