பெரியாறு ஆர்பாட்டம்

பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை விரைவில் பலப்படுத்தி அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வேண்டும். இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தேனி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, முல்லைச்சாரல் விவசாய சங்கம், முல்லைப் பெரியாறு பாசன குடிநீர் பாதுகாப்பு சங்கம், விவசாய சங்கத்தினர் இணைந்து 152 பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.