ஷாலினியை கைது செய்ய கோரிக்கை

டாக்டர் ஷாலினி என்ற மனநல மருத்துவர் ஹிந்து மதத்தில் நெற்றியில் வைக்கப்படுகின்ற திருநாமம், சிவபெருமானின் நெற்றிக் கண் ஆகியவற்றைப் பற்றி கொச்சையாக, அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்து பேசியுள்ளார். அந்த கட்டுரையை தடைசெய்து சமூக வலைதளங்களில் இருந்து அவற்றை நீக்கவேண்டும். மத உணர்வுகளை புண்படுத்தி மதரீதியாக கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் ஷாலினி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.