புத்தகம் வெளியீடு

ரங்கஹரி எழுதி, தமிழக வித்யாபாரதி பொறுப்பாளர் யு.சுந்தரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பாரத ராஷ்ட்ரத்வத்தின் தொடர்ச்சியான ப்ரவாஹம்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா திருப்பூர் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் அருண்குமார் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தென் பாரத தலைவர் வன்னியராஜன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன், வி.ஹெச்.பி அகில பாரத இணை பொதுச்செயலாளர் ஸ்தாணுமாலயன், ஆர்.எஸ்.எஸ் தென் பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.