பொய் கூறும் பர்காதத்

சில நாட்களுக்கு முன் பிரபல என்.டி.டி.வியின் பத்திரிகையாளர் பர்காதத்தின் தந்தை கொரோனா காரணத்தால் மரணமடைந்தார். இது குறித்து தொலைகாட்சியில் பேசிய பர்காதத், தன்னுடைய தந்தை மூச்சுத் திணறல் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார். ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டரில் அக்ஸிஜன் இல்லை, அது சரிவர வேலை செய்யவில்லை. இதன் காரணமாக என் தந்தை இறந்துவிட்டார் என குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதனை அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மறுத்துள்ளார். தான் ஓட்டிய ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் நிறைவாக இருந்தது. அது சரிவர வேலை செய்தது. ஆக்ஸிஜன் சரியாக வெளிவருவதையும் மாஸ்கையும் பர்காதத் ஆய்வு செய்து உறுதி செய்தார். மேலும், அவரது தந்தையை நான்தான் அழைத்து சென்றேன். என தெரிவித்தார். மேலும், ஆம்புலன்ஸில் நடைபெற்ற உரையாடலின் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பர்காதத் கூறிய பொய் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.