கரோனா ஆம்புலன்ஸ்கள் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் 108 அவசர கால ஊர்திகள் 1,303 இயங்கி வருகின்றன. இதில், கரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயக்கப்படுகின்றன. தினசரி சுமார் 5,200 பொது நோயாளிகளும் 2,500 கரோனா நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா பணிக்காக ஒதுக்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 351 ஆக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ‘கோவிட் கண்ட்ரோல் ரூம்’ என்ற தனிக் கட்டுப்பாட்டு சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 044-40067108 என்ற தொலைபேசி எண் மூலம் இம்மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.