தமிழக அரசு எவ்வளவு தரும்?

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த இழப்பீட்டை, மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து மாநிலங்கள் வழங்கும். கொரோனா தடுப்பு, சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாநில அரசு நிதியுதவி அளிப்பது சாத்தியமில்லை என தெரிவித்துவிட்டார். முன்பு எதிர்கட்சியாக இருந்தபோது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி தரவேண்டும் என கூறிய இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது இதற்கு என்ன கூறப்போகிறார்?