பிஷப்பிற்கு தேவாலயம் ஆதரவு

கேரளாவில் கடந்த செப்டம்பர் 9 அன்று ஒரு தேவாலயத்தில் பக்தர்களிடம் உரையாற்றிய பாலா பிஷப் மார் ஜோசப் கல்லரங்கட், ‘கேரளாவில் இளம் பெண்கள் பெரும்பாலும் லவ் ஜிஹாத், போதைப்பொருள் ஜிஹாத்திற்கு பலியாகி வருகின்றனர். இந்த நடவடிக்கைகள், முஸ்லீம் அல்லாதவர்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன’ என குற்றம் சாட்டினார். இதற்கு கம்யூனிஸ்ட்டு, காங்கிரஸ், முஸ்லிம் லீக் என சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு சில மிரட்டல்களும் வந்தன. இதனையடுத்து, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சிரோ மலபார் தேவாலயம் ‘அவர் எந்த மதத்தையும் சமூகத்தையும் அவதூறு செய்யவில்லை. சமூக விரோத செயல்பாடுகளுக்கு எதிராக அவர் வெளியிட்ட சில எச்சரிக்கை குறிப்புகளுக்காக, அவர் மீது தனி மனித தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அவருக்கு எதிரான நடவடிக்கைகல் கைவிடப்பட வேண்டும். நாங்கள் இதை எதிர்த்து அவருடன் துணை நிற்போம்’ என கூறியுள்ளது.