இலவச உணவு தானியம்

கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், பிரதம மந்திரி ஏழைகள் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும் என கடந்த மாதம், மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் சுமார் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்.