சேவைத்துளிகள்

  1. சேலம் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 250 ஸ்டீல் கட்டில்களும் அதற்கான மெத்தை தலையணைகளும் வழங்குவதாக சேவாபாரதி சார்பாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் முதல் கட்டமாக நேற்று 40 கட்டில்களும் அதற்கான மெத்தை தலையணைகளும் சமூக ஆர்வலர் சுபாஷ், ஆனந்த், ஆர்.எஸ்.எஸ் தலைவர் குமாரசுவாமி, சோழா பில்டர் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலையில் சேலம் மாநகர ஆணையரிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ளவை விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
  2. மன்னார்குடியில் உள்ள ராஜ் மருத்துவமனைக்கு 4 லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் உபகரணங்களை, கலங்கரை சேவா அறக்கட்டளை, சோஹோ பவுண்டேஷன், சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் இணைந்து இலவசமாக வழங்கின. இதில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் பரணீஸ்வரன், விஸ்வநாதன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  3. காஞ்சிபுரத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கொரனா தடுப்பூசி முகாமிற்கு விஜயம் செய்த தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அங்கு சேவை செய்து வந்தவர்களை ஆசீர்வதித்து தானும் இரண்டாவது தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்து அதிகமான மக்கள் பங்கேற்க செய்வோம் என்று கூறினார். மேலும், காஞ்சிபுரத்தில் அடுத்த கொரனா தடுப்பூசி முகாமை தமது ஆதீனத்தில் நடத்தித்தருவதாகவும் கூறினார். இந்த சிறப்பு முகாமில் வி.எச்.பி மாநில அமைப்புச் செயலாளர் ராமன், ஆர்.எஸ்.எஸ் விபாக் பிரச்சாரக் ஹரீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.