தேசிய கொடி கம்பத்தில் தி.மு.க கொடி

தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையின்போது, தி.மு.க.,வினர் சிலர், கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள கிணத்துக்கடவு எம்.எல்.ஏ அலுவலகத்துக்குள் நுழைந்து அலுவலகத்தில் உள்ள தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.கவின் கட்சிக் கொடியை பறக்க விட்டனர். ஓட்டு எண்ணிக்கை முடிவில், அ.தி.மு.க வெற்றி பெற்றதால் கட்சிக் கொடியை அகற்றினர். தி.மு.க.,வினர் கொடி ஏற்றியது சமூக வலைதளங்களில் பரவியது. தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடியை ஏற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.