தி.மு.க. வை கிண்டலடிக்கும் அ.தி.மு.க

  ‘ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க கோட்டை. விவசாயி என்று நான் சொன்னால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. விவசாயி, விவசாயி என்று தான் சொல்ல முடியும். தி.மு.க’விற்கு பெட்டி வாங்கியே பழக்கம். அதனால்தான் ஸ்டாலின் தன்னோடு பெரிய பெட்டியினை கொண்டு செல்கிறார்’ என முதல்வர் எடப்பாடியார் ஸ்டாலினை கிண்டல் செய்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘பஞ்ச பூதத்திலும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என மக்கள் உடமைகளை ஈவு, இரக்கமின்றி பறிக்கும் கட்சி தி.மு.கதான். தமிழ்நாட்டில் ஊழலை அறிமுகம் செய்தது தி.மு.க. ஒவ்வொரு முறை அதிகாரத்திற்கு வரும்போதும் ஒவ்வொரு விதமான ஊழல். ஊழலுக்காக உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி தி.மு.கதான்’ என்று தன் பங்கிற்கு தி.மு.கவை கலாய்த்துள்ளார்.