வாயில் சனி பாதிரி சற்குணம் செயலில் சகுனி திமுக, திக

ஒரு சின்ன ப்ளாஷ் பேக்திகவும்,

திமுகவும் பலகாலமாக ஹிந்து விரோத பரப்புரை செய்து, ஹிந்து  கடவுளரை நிந்தனை செய்து வந்துள்ளது. ”ஹிந்து என்றால் திருடன்” என ஆங்கிலம் தெரியாத கருணாநிதி ஆங்கில அகராதியை பார்த்து அர்த்தம் சொன்ன அவலம் நாம் பார்த்ததுதான். பக்கத்து வீட்டுக்காரன் வெடிச்சத்தத்திற்கே ஓடி ஒளியும் இவர்கள் ”ஸ்ரீரங்கநாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்து பிளக்கும்” நாளுக்காக காத்திருப்பதாக சொன்னார்கள்.

கருணாநிதி குடும்பத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவரும் ஒன்றாக ஒரே குரலில் கடவுளர்களை  தூற்றுவார்கள். திருப்பதி வெங்கடாஜலபதி சாமி உண்டியலுக்கு ஏன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என்று கனிமொழி சொல்லுவார். பணத்தை காப்பாற்ற முடியாத சாமி மக்களை எப்படி காக்கும் என்பார். திருச்சி, விடுதலை சிறுத்தை மாநாட்டில் அண்ணன் ஸ்டாலின் சனா தனத்தை வேரறுப்போம் என்பார். கோவில்களில் அசிங்கமான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் கேலி பேசுவார். இவைகள்  எல்லாம் பொது வெளியில் பொதுக்கூட்டங்களில் இவர்கள் பேசியது. இது ஒருபுறம். ஆனால் சமீப காலமாக இவர்கள் மாற்றுமத பண்டிகை கொண்டாட்டங்களில், சர்ச், மசூதி நடத்தும் கூட்டங்களில் இதே மாதிரி ஹிந்து மத தூஷணைகளளை அடுக்கி வருவது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சமீபத்தில் சர்ச் ஒன்றில் நடந்த கூட்டத்தில் சிவனியம் பேசக்கூடிய சிவபக்தை  என்று கூறிக் கொள்ளும் கலையரசி நடராஜன் என்ற மூதாட்டி ”ஹிந்து என்று சொன்னாலே என் உடம்பெல்லாம் எரிகிறது” என்று பேசினார். மேடையில் இருந்த வைகோ, ஸ்டாலின், சற்குணம் ஆகியோர் கைதட்டி பாராட்டியுள்ளனர்.

முதலில் சிவனியம் பற்றிய அவரது கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானது. ஆன்மிக ஞானமோ, சரித்திர அறிவோ ஆதரமோ இல்லாதது. எப்போதும் போல எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் சொல்லும் ”திராவிடப் புளுகு” இது. முதலில் தாங்களாக பொய்யுரை பரப்பினார்கள். பின்னர் கலையரசி நடராஜன் போன்ற கூலிகளை கூட்டிவந்து புளுகை அடுக்கினார்கள். தற்போது மாற்றுமத மேடைகளில் மாற்று மதத்தினரை விட்டே அவதூறுகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர். இதன் வெளிப்பாடுதான் எஸ்றா. சற்குணம் என்கிற பாதிரிப் போர்வையிலுள்ள ஒரு நச்சுப்பாம்பு. வெள்ளாடை உடுத்திய கருப்பர் கூட்டத்தின் கைக்கூலி. வெளிநாட்டுப் பணத்தில் வயிறு வளர்க்கும் பிறவிப் பாவி. நம் மண்ணின் உப்பை, உணவைத் தின்று சொந்த நாட்டிற்கு துரோகம் செய்யும் தேசத் துரோகி.

இந்த மாபாவி ஏற்கனவே ஹிந்துக்கள் முகத்தில் ரத்தம் வரும் வரை குத்த வேண்டும் என பேசியவர். அதற்கு பல ஊர்களில் இவர் மேல் புகார் அளித்தும் இன்னும் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு காரணத்தை முதல்வர் எடப்பாடியாரிடம் தான் கேட்க வேண்டும். டிசம்பர் 18ல் நடைபெற்ற ஒரு கிறிஸ்துமஸ் விழாவிலும், நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாமல் பாரதப் பிரதமர் மோடி மீது அசிங்கமான, தரக்குறைவான வார்த்தைகளை எஸ்றா. சற்குணம் வீசியிருக்கிறார். அதை ஸ்டாலின், வைகோ மற்றுமுள்ள அனைவரும் கைதட்டி வரவேற்றுள்ளனர். இதைக் கண்டித்து பாஜகவினர் சற்குணம் மீது போலீசில் புகார் அளித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. சற்குணம் மேலும் எத்தனை முறை இப்படி பேசினால் எடப்பாடியார் நடவடிக்கை எடுப்பாரோ தெரியவில்லை.

ஹிந்து மதம் தவிர மீதி அத்தனை மதமும் மதச் சார்ப்பற்ற மதம் என்பது பாரதத்தின் அரசியல்வாதிகள் ஆன்மிகவாதிகள் ஏன் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் எண்ணம். பாஜக தவிர எந்த கூட்டணியும் மதச்சார்பற்ற  கூட்டணி. எந்த கூட்டமும் மதநல்லிணக்க கூட்டம். இது ஒரு தலைபட்ச எண்ணம். கிறிஸ்தவர்களே, முஸ்லிம்களே! கிறிஸ்தவ இஸ்லாமிய பண்டிகை கூட்டங்களில் ஹிந்து மதத்தை அதாவது மாற்று மதத்தை இழிவாக பேசுவதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் அனுமதிக்கலாமா? அப்படி அனுமதித்தால் அது மதநல்லிணக்கத்திற்கு எதிரானது அல்லவா? உண்மையிலேயே மத ஒற்றுமையை இவர்கள் விரும்புவார்களானால் இப்படிப்பட்ட பேச்சை முதலில் அனுமதிக்கக்கூடாது. அது மட்டுமின்றி கண்டிக்கவும் வேண்டும். இவற்றில் ஒன்றுமே செய்யப்படவில்லையே? மாறாக கையல்லவா தட்டுகிறார்கள்!  எஸ்றா. சற்குணம் போன்ற ஹிந்து மத வெறுப்பு உமிழும் பாதிரி போர்வையிலுள்ள தரந்தாழ்ந்தவர்கள் பேசும் பேச்சுக்கு அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். ஸ்டாலின் போன்ற ஹிந்துமத அவதூறு பேச்சாளர்களை உங்கள் மேடையில் ஏற்றுவதை நிறுத்த வேண்டும். இவைகளை செய்தாலே உண்மையான மத நல்லிணக்கம் மலரும், மத ஒற்றுமை ஓங்கும். இதை சர்ச்சுகளும் மசூதிகளும் செய்யுமா?