ஆந்திரா தற்போது பாகிஸ்தானாக மாறிவிட்டதா? – நடிகர் பவன் கல்யாண்

பாகிஸ்தானில் இருக்கிறோமா..

ஆந்திராவில் இந்து கோயில்கள் உடைப்பு சம்பவம் தொடருவதை கண்டித்து ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கூறும்போது, ‘‘ஆந்திரா தற்போது பாகிஸ்தானாக மாறிவிட்டதா என எண்ணத் தோன்றுகிறது. ஆந்திராவில் பல இந்து கோயில்கள், சிலைகள், தேர்கள் நாசம் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோல பாகிஸ்தானில் நடந்து வருவதாக கேள்விப்பட்டுள்ளோம். அதை நாம் இப்போது ஆந்திராவில் காண நேர்ந்துள் ளது. நாம் ஆந்திராவில் இருக்கிறோமா? பாகிஸ்தானில் இருக்கிறோமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.