ஹிந்து கோவில்கள் குறிவைத்து தாக்குவது கண்டிக்க தக்கது – தெலுங்கான பாஜக தலைவர்

பொறுமையை சோதிக்காதீர்கள்..

தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் ஹைதராபாத்தில் நேற்று கூறும்போது, ‘‘ஆந்திராவில் தொடர்ந்து இந்து கோயில்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இதனை அரசு கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இந்து மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். பாஜக தொண்டர்கள் களத்தில் இறங்கினால், முதல்வர் ஜெகன், மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டுவீட்டுக்குப் போக வேண்டியதுதான். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், தெலங்கானா இடைத்தேர்தல் முடிவுகள்தான் ஆந்திராவிலும் வரும். நடைபெற உள்ள திருப்பதி மக்களவைத் தொகுதித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு நாங்கள் அதிர்ச்சி அளிப்பது உறுதி. திருப்பதி மக்கள் பைபிள் வேண்டுமா ? பகவத் கீதை வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்ளட்டும்’’ என ஆவேசமாக பேசினார்.