அதிகார பலத்தை கொண்டு மதம் மாற்ற நினைப்பது தவறு – சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவராக இருந்தாலும், அவர் தனது அதிகார பலத்தை உபயோகித்து, இந்து மக்களை அவரது மதத்திற்கு மாற்ற நினைப்பது தவறு. இந்து மக்களிடையே ஒருவித பயத்தை உண்டாக்கி, அதன் மூலம் அவர்களை மதமாற்றம் செய்து விடலாம் என நினைப்பது தவறு. ஆட்சியில் ஒரு மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் இதுபோன்ற மத மாற்றத்தை ஊக்குவிப்பதோ அல்லது உருவாக்க நினைப்பதோ மிகவும் தவறு. இது மிகப்பெரிய துரோகமும் ஆகும். கோதண்டராமர் சிலையின் தலையை வெட்டி குளத்தில் வீசிய சம்பவம் இந்த மண்ணுக்கு மிகப்பெரிய அவமானமாகும். ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த கடந்த 18 மாதங்களில் 127 இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இதுவரை ஜெகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என குற்றம் சாட்டியுள்ளார்.