மக்களின் அன்பும் ஆதரவும் பாதுகாக்கும் – மோடி

போடோலாந்து பிரிவினைவாத அமைப்புகளுடன் மத்திய மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டதற்குப் பிறகு, அதை கொண்டாடும் விதமாக அஸ்ஸாமின் கோக்ரஜார் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அஸ்ஸாமின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, போடோ அமைப்புகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் அனைவருக்கும் வெற்றி கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். ஒப்பந்தம் நிறைவேறி இருப்பதன் மூலம், அமைதியும், அகிம்சையும் வெற்றி பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இனி அஸ்ஸாமும், வட கிழக்கு மாநிலங்களும் புதிய உத்வேகத்துடன் வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போடும் எனவும் அவர் கூறினார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக பிரதமர் மோடியை, இளைஞர்கள் பிரம்பால் அடிப்பார்கள் என்று ராகுல் காந்தி கூறி இருந்ததற்கு, இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் பதிலடி கொடுத்தார். மக்களின் அன்பும், ஆதரவும் தன்னை பாதுகாக்கும் என நரேந்திர மோடி தெரிவித்தார்.