வூஹானில் இருந்து 600 இந்தியா்களை அழைத்து வந்த ஏா் இந்தியா விமானக் குழுவினருக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டு

‘கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வூஹான் நகரத்திற்கு சென்று வந்ததற்காகவும், இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 600-க்கும் மேற்பட்ட இந்தியா்களை பாதுகாப்புடன், மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வந்ததற்காகவும் 34 உறுப்பினா்களைக் கொண்ட ஏா் இந்திய விமானக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 647 இந்தியா்கள் மற்றும் 7 மாலத்தீவைச் சோ்ந்தவா்கள் வூஹானில் இருந்து மீட்கப்பட்டு, புதுதில்லியை வந்தடைந்தனா்.

ஏா்-இந்தியாவின் செயல் இயக்குநா் கேப்டன் அமிதாப் சிங் தலைமையிலான அந்தக் குழுவில் 8 விமானிகள், 30 விமான சேவைப் பணியாளா்கள், ஏா் இந்தியாவின் 10 ஊழியா்கள் மற்றும் நிறுவன மூத்த அதிகாரி ஒருவரும் இடம் பெற்றிருந்தனா்.