இவர்களை தெரிந்து கொள்ளுங்கள்

உலக அளவில், நம் தேசத்திற்கும் மத்திய அரசுக்கும் அவப்பெயர் விளைவிக்கும் நோக்கில் விவசாயிகள் எனும் பெயரில் பயங்கரவாதிகள் டெல்லியில் நடத்திய அராஜகத்தை உலகறியும். இந்நிலையில் ‘மத்திய அரசின் அணுகுமுறையே போராட்டத்திற்கு காரணம். அ.தி.மு.க ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறி இருக்காது’ என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வன்முறையாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இ. கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன். அமைதியாக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன். அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன், மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என வன்முறைக்கு தூபம் போடுகிறார் வை.கோ. இதற்கெல்லாம் பின்புலமான காங்கிரஸின் ராகுலோ, வன்முறையால் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேதத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் இவர்கள்தான் தமிழகத்தை ஆளத் துடிக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.