மனித நேயமற்ற ம.நே.ம.க

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பா.ஜ.க வாகன பிரசாரத்தில், ஏகத்துவ பிரசார ஜமாத் கட்சியின் தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசினார். அப்போது அங்கு வந்த மனித நேய மக்கள் கட்சியினர், இப்ராஹிம் பேச எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரை கீழே இறங்கவும் வற்புறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. காவல்துறை அதிகாரிகள் இப்ராஹிமை பாதுகாத்தனர். கலவரம் ஏற்படுத்த முயன்ற 40 பேர் கைது செய்யப்பட்டனர்.