மீண்டும் கைதாவாரா சிதம்பரம்?

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி ஊழல் வழக்கில், கடந்த ஆகஸ்ட் 21, 2019 அன்று கைது செய்யப்பட்ட ப. சிதம்பரமும் அவரது மகனும் தற்போது ஜாமினில்தான் வெளியே உள்ளனர். இந்நிலையில், ப. சிதம்பரம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். தன் மகன் கார்த்தியின், ‘அட்வாண்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் வணிக நலன்களுக்கு உதவ மற்ற நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் என்று அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் இருவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கம்போல சிதம்பரம் இதனை மறுத்துள்ளார்.